பரணி ரெக்கமெண்ட் ல நடிக்கிறதுக்கு தூக்குல தொங்கிருவேன்: கொதித்தெழுந்த கஞ்சாக் கருப்பு

பிக் பாஸ் ஆரம்பித்து 20 நாள்கள் கடந்துவிட்டது. இதுவரை அனுயா, ஆர்த்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஶ்ரீ உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், பரணி உளவியல் பிரச்சனை காரணமாகவும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.
இது குறித்து அவர்களிடம் கேட்டால் நிகழ்ச்சியின் விதிமுறைப்படி 100 நாட்களுக்கு அதைப் பற்றி பேசக்கூடாது எனக் கூறியுள்ளார்கள் என்று கூறினர்.
இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து மன உளைச்சல் காரணமாக வெளியேறிய பரணி, நடிகர் கமலிடம் உரையாடினார்.
அப்போது பரணி பேசிய வார்த்தைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பரணி கற்ற அனுபவத்தையும் முதிர்ச்சியையும் காட்டியது. பரணி, கமலிடம் நேற்று பேசுகையில், நான் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் காமெடியனாக நடிக்க இயக்குநர் வேறு ஒரு காமெடியனை ஒப்பந்தம் செய்வதாகச் சொன்னார்.
ஆனால், நான்தான் கஞ்சா கருப்பு அண்ணன் காமெடி ரோல் பண்ணினால் நன்றாகயிருக்கும் என்று இயக்குநரிடம் சொன்னேன் என்றார். அதுமட்டுமன்றி பரணி நம்மிடம் தொடர்புகொண்டு பேசியபோது நான் ஹீரோவாக கமிட் ஆகும் படங்களில், இயக்குநர் சம்மதம் தெரிவித்தால் கஞ்சா கருப்புக்கு வாய்ப்புகள் கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இதுபற்றி கஞ்சா கருப்பிடம் கேட்டபோது, பரணி வாய்ப்பு கொடுத்து நான் நடிக்கிற மாதிரி ஒரு நிலைமை வந்தால், நான் தூக்கு மாட்டி சாகத்தான் வேண்டும். ஒரு சீனியர் நடிகரை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவு கேவலப்படுத்திருக்கார். யாருங்க அவர் ? எனக்கு வாய்ப்புக் கொடுக்க? இயக்குநர் அமீரா இல்லை பாலாவா… காமெடி நடிகர் வடிவேலுக்கு, சந்தானத்துக்கு நான் ரெக்கமென்ட் பண்ணுனேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா..? மேடை நாகரிகம்னு ஒண்ணு இருக்கு. அது தெரிய வேண்டாமா, சிம்ப்ளா சொல்லுறேங்க.
இப்போ சசிகுமார் சார் நடிக்க நான்தான் ரெக்மென்ட் பண்ணுனேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? அதுமாதிரிதான் பரணி, நான் நடிக்க ரெக்கமென்ட் பண்ணுனேன்னு சொன்னது, பண்ணுறேன்னு சொல்றது. இந்த உலகத்துக்கு பரணியை யாருன்னு தெரியாது. ஆனா, கஞ்சா கருப்பு யாருன்னு எல்லோருக்கும் தெரியும். என்றார்.

Comments